Tuesday, April 28, 2009

சிவராமின் நான்காவது ஆண்டு நினைவு அஞ்சலி




இதுவரை தீர்ப்பு வழங்கப்படாத சிவராம் கொலை வழக்குக்கு நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர்களின் மனங்களை விட்டு விலகி விடாத ஒருவரான தராக்கி என்ற சிவராமின் நினைவுகளை மட்டும் அனேகமானோர் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய படைப்புக்கள் அனைத்தையும் கற்று உண்மைகள் பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமானது.

சிவராமின் நான்காவது நினைவு தினத்தில் அவருடைய எழுத்துக்கள் அனைத்தையும் ஒரு சேரப் பதித்து வெளியிடுவதற்கான முயற்சியை யாராவது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.

ஈழப்போராட்டத்தில் தனது வாழ்க்கையையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு வருடைய வாழ்க்கையின் பல ஞாபகங்கள் மறைந்தே போயின. இருப்பவற்றை மறைத்து விடாமல் வெளிப்படுத்தி வாருங்கள்.

பத்திரிகையாளர்கள் நல்ல பல புதிய விடயங்களைத் தொடருந்து கற்க வேண்டும் என்ற அவரின் ஆலோசனைக்கு அமைய சிந்தியுங்கள் செயற்படுங்கள் நோக்கங்களை நிறைவேற்றுங்கள். அது அவருடைய ஆத்மா சாந்தியடைய வழி செய்யும்.

0 comments: